மாணவிகளிடம் செக்ஸ் குறும்பு: ஆசிரியர் சஸ்பெண்ட்
பட்டுக்கோட்டை:
மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் உள்ளது சித்துக்காடு அரசு உயர் நிலைப்பள்ளி.
இங்கு சுமார் 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு மாணவிகளிடம் சில ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வதாகபுகார்கள் எழுந்தன. ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் மாணவிகளை தனியே வரவழைத்து இந்தக் கேவலமான செயல்களில்ஈடுபடுள்ளனர்.
மாணவிகளுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைத் தந்து பின்னர் அவர்கள் அரை மயக்கத்தில் இருக்கும்போது செக்ஸ்லீலைகளில் இந்த ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து பட்டுக்கோட்டை கல்வி அதிகாரிசாமிநாதன் விசாரணை நடத்தினார்.
மாணவ, மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோது ஆசிரியர்களானவீரத்திருமகன், சாமிக்கண்ணு ஆகியோர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்தது ஊர்ஜிதமானது.
இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கல்வி அதிகாரி பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்துவீரத்திருமகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சாமிக்கண்ணு வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என மாணவிகளும் பெற்றோரும்கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications