வாக்குப் பதிவு இயந்திரமே சிறந்தது: நல்லகண்ணு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்துவதே சிறந்தது, நம்பகமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல்களில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை பின்பற்றவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோருவதை ஏற்க முடியாது.
வாக்குச் சீட்டு முறையை விட வாக்குப் பதிவு இயந்திரமே மிகச் சிறந்தது, நம்பகமானது. விரைவாகவும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள முடியும்.
கள்ள ஓட்டுக்களைத் தடுக்கவும், செல்லாத ஓட்டுக்களை அறவே ஒழிக்கவும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான்சரியானவை. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேண்டாம் என்று சொல்லும் முதல்வர் ஜெயலலிதாவின் வாதம் ஏற்கக்கூடியதாக இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications