சுனாமியால் தடைபட்ட திருமணங்களை நடத்தி வைத்த கலெக்டர் ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்:

சுனாமியால் தடைபட்ட 6 ஜோடிகளின் திருமணங்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் நடத்தி வைத்தார்.

கடந்த டிசம்பரில் சுனாமி தாக்கியதால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.

Radhakrishnan with new married couples
அவ்வாறு தடைபட்ட திருமண ஜோடிகளைக் கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது டிஎம்ஐஎன்ற கிருஸ்துவ சமூக அமைப்பு. இந்த அமைப்புக்கு முழு உதவிகளையும் செய்து வருகிறார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

இந்த அமைப்பின் உதவியால் நாகப்பட்டிணத்தில் திருமணம் தடைபட்ட 8 ஜோடிகளுக்கு மாரியம்மன் கோவிலில் திருமணம்நடத்தி வைத்த ராதாகிருஷ்ணன், நாகூரில் திருமணம் தடைபட்ட மேலும் 6 ஜோடிகளுக்கு ஒரு திருமண மண்டபத்தில திருமணம்நடத்தி வைத்தார்.

நாகூர் திருமண நிகழ்ச்சியில் பேசிய ராதாகிருஷ்ணன்,

சுனாமியால் தடைபட்ட இந்து ஜோடிகளின் திருமணத்தை புரோகிதர் உதவியுடன் யாகம் வளர்த்து நடத்தி வைக்கிறது ஒருகிருஸ்துவ தொண்டு அமைப்பு. இந்தத் திருமணம் நடப்பது இஸ்லாமிய புனிதத் தலமான நாகூரில்.

இந்தத் திருமண நிகழ்ச்சி கூட மத ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக மாறிவிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.சுனாமி தந்த வலிகளை மறந்து, குடும்ப வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் இந்தத் தம்பதிகளை என் குடும்பத்தின்சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.

இந்த திருமண நிகழ்ச்சியில் தம்பதிகளின் உறவினர்கள் மட்டுமின்றி டிஎம்ஐ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜி, மாவட்டநிவாரணப் பிரிவு வருவாய் அதிகாரி ஜெயராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+