அமெரிக்காவுக்கு ஏர் இந்தியாவின் கூடுதல் விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்:

டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்கஏர்-இந்தியா முடிவு செய்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, பிராங்பர்ட், ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு டெல்லி, மும்பை ஆகியஇடங்களிலிருந்து மார்ச் மாதம் முதல் கூடுதல் விமானங்களை இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக சியாட்டிலில் ஏர்-இந்தியா நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி பார்கவா கூறுகையில்,

ஏர் இந்தியாவின் வருவாய் இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா- இந்தியா இடையிலானபயணிகள் போக்குவரத்து இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இதனால் அமெரிக்காவுக்கு மேலும் அதிக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக கூடுதல்விமானங்களை குத்தகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு மார்ச் 28-ந்தேதி முதல் தினமும் விமானங்கள் இயக்கப்படும்.அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

அடுத்த மாத இறுதிக்குள் நியூயார்க், நேவர்க், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு வாரத்திற்கு 28சர்வீஸ்கள் இயக்கப்படும்.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் கேரளாவின் முக்கிய மூன்று நகரங்களிலிருந்து குறைந்த கட்டணத்தில் அரபுநாடுகளுக்கு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பார்கவா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+