டி.ஆர்.பாலுவுக்கு எதிரான வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென் சென்னை தொகுதியில் டி.ஆர். பாலு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்தவர், உரிய பதில் மனுவைவருகிற 28ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிசொக்கலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.ஆர்.பாலு. இரண்டு மனைவிகள் உடையடி.ஆர்.பாலு தேர்தலில் போட்டியிட்டது சட்டப்பஐ குற்றமாகும். எனவே அவரது தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கோரி அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட புருஷோத்தமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு நோட்டீஸ்அனுப்பினார். டி.ஆர்.பாலுவும் அதற்கு பதில் அனுப்பினார். அதில், மனுதாரர் தனது ஆட்சேபத்தை வாக்குப் பதிவுக்கு முன்பே உரியதேர்தல் அதிகாரியிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு புருஷோத்தமனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் பலமுறை வாய்தா கோரியும் இதுவரைபுருஷோத்தமன் விளக்கம் அளிக்கவில்லை.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது புருஷோத்தமனின் வழக்கறிஞர் மீண்டும் வாய்தா கேட்டார். ஆனால் இதற்குடி.ஆர்.பாலுவின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வருகிற 28ம் தேதி பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அதுதான் இறுதியான வாய்ப்பு. அன்று பதில் மனு தாக்கல்செய்யப்படாவிட்டால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று நீதிபதி சொக்கலிங்கம் கடுமையாக எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+