செல்போனில் போலீஸ் மிரட்டுகிறது: குருமூர்த்தி புகார்
சென்னை:
கைது செய்து விடுவதாக தன்னை போலீஸார் செல்போன் மூலம் மிரட்டுவதாக ஆடிட்டர் குருமூர்த்தி ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் பிரபல ஆடிட்டரும், கட்டுரையாசியருமான குருமூர்த்தி மீது விசாரணையைத் திசை திருப்பியதாகவும்,உண்மையான தகவல்களைத் தர மறுத்ததாகவும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து குருமூர்த்தி தலைமறைவாகி விட்டார்.
இந் நிலையில் தன் மீது காஞ்சிபுரம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை எதிர்த்து நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்தார். இந்த மனு நீதிபதி கே.டி.சிவ சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குருமூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன்,
அரசியல் சட்டம் 19(1)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை கருத்து சுதந்திரத்தை தடுக்கும் வகையில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். பொய்யான புகார்களின் பேரில், உள் நோக்கத்துடன் இந்த வழக்கு பாடப்பட்டுள்ளது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்என்றார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைசாமி, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதே அல்ல, அரசு தரப்பு விளக்கம் அளிக்க காலஅவகாசம் தேவை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை முடியும் வரை போலீஸார் பதிவு செய்து வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றகுருமூர்த்தி தரப்பின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இந் நிலையில் இன்று குருமூர்த்தியின் வழக்கறிஞர் ராஜகோபால் நீதிபதி சிவசுப்ரமணியத்திடம் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில், குருமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்யப் போவதாக கூறி மிரட்டுகிறார்கள். எனவேமனு மீதான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து குருமூர்த்தி தாக்கல் செய்த ரிட் மனு இன்று பிற்பகலே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார்.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications