ஜெயேந்திரருக்கு அட்வைஸ்: போலீஸ் கண்காணிப்பில் பங்காரு அடிகளார்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் ஆலோசனைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆதிபராசக்தி பீடத்தின் வருமானம், சொத்துக்கள் குறித்து ரகசிய விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரருடன் அடிகளார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது வழக்கில் குறித்து சில யோசனைகள் தந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை உளவுப் பிரிவினர் மூலமாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா, இது குறித்து அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது பங்காரு அடிகளாருக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்ததாகவும் தெரிகிறது.
ஜெயேந்திரருக்கு ஆலோசனை வழங்கியதையடுத்து ஆதிபராசக்தி பீடத்தின் செயல்பாடுகளும் போலீசாரின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.