லேடீஸ் ஹாஸ்டலில் புகுந்த திருடன்: வளைத்து பிடித்த மாணவிகள்
சென்னை:
சாலையில் சென்ற பெண்ணிடம் தங்ககச் சங்கிலியைப் பறித்த திருடன், தப்ப முயன்று பெண்கள் விடுதிக்குள் நுழைந்தான். அவனை மாணவிகளுள் வளைத்துப் பிடித்து மொத்து மொத்தி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை கோட்டூர்புரம் மேம்பாலப் பிளாட்பாரத்தில் ஜோதிலட்சுமி என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜோதிலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினான்.
அவனை ஜோதிலட்சுமியும் சாலையில் சென்ற சில பெண்களும் துரத்திச் சென்றனர். அப்போது அந்த வாலிபர் நந்தனம் விரிவாக்கப் பகுதியில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்துவிட்டான்.
இதையடுத்து அங்கிருந்த மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருடனை வளைத்துப் பிடித்தனர். மாணவிகள் தந்த தர்ம அடிகளைத் தாங்க முடியாத அந்த நபர், சரணடைந்தார்.
அவரது பெயர் சுப்பையா என்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. வேலை தேடி சென்னை வந்த சுப்பையா, கையில் பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அவ மாணவிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்












Click it and Unblock the Notifications