எம்.எஸ்: பாஸ் மார்க் கேட்டு துணைவேந்தரை மிரட்டிய டாக்டர்
சென்னை:
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரம்மானந்தத்தை மிரட்டியதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரசு ராயப்பேட்டை மருத்துவனையில் விபத்துத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்தவர் டாக்டர் விவேகானந்தன். இவர் சமீபத்தில் எம்.எஸ். தேர்வு எழுதினார்.
தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகமடைந்த அவர், மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிரம்மானந்தத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு கூடுதல் மதிப்பெண்கள் போட்டு தேர்வு பெற வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு டாக்டர் பிரம்மானந்தம் மறுக்கவே, மார்க் போடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று டாக்டர் விவேகானந்தன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பிரம்மானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விவேகானந்தனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications