For Daily Alerts
Just In
வேலூரில் செஞ்சுரி அடிக்கும் வெயில்!
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக வேலூரில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
வேலூருக்கு அடுத்தபடியாக சேலத்தில் 97 டிகிரி பதிவானது. சென்னையில் நேற்று வெப்பநிலை 92 டிகிரியாக இருந்தது. மாலையில் கடற்காற்று வீசத்தொடங்கியதால் வெயிலின் தாக்கம் குறைந்தது.
பிப்ரவரியிலேயே வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டதால் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் கொடுமை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Friday, February 25, 2005, 5:30 [IST]