பக்தர்களுக்கு ஜெயேந்திரர் தரப் போகும் பரிசு!
கலவை:
மகா சிவராத்தியை முன்னிட்டு 1008 முறை ஓம் நமச்சிவாய என்று எழுதி கலவை மடத்திற்கு அனுப்பினால் ஜெயேந்திரர் ஆசிர்வதித்தபேனா, சிவன் படம் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் என கலவை மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சங்கரராமன் கொலைக்குப் பிறகு காஞ்சி சங்கர மடம் பொலிவிழந்து போயுள்ளது. ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர்காஞ்சிபுரம் வராமல், வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள சங்கர மடத்தில் தங்கியுள்ளார். தற்போது அந்த மடம் புதுப்பிக்கப்பட்டுவிரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் இப்போதைக்கு காஞ்சிபுரம் மடத்திற்கு வர முடியாது என்பதால் கலவை மடமே தற்போது காஞ்சி காமகோடி பீடமாகமாறியுள்ளது. இந் நிலையில் கலவை மடத்தின் சார்பில் மாணவர்களுக்கு சில பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 8ம் தேதி வரும் மகா சிவராத்தியை முன்னிட்டு 1008 முறை ஓம் நமச்சிவாய என்று எழுதி ஜெயேந்திரருக்கு கடிதம் அனுப்பினால்அவர்களுக்கு ஜெயேந்திரர் ஆசிர்வதித்த சிவன் படம், பிரசாதம், பத்தாவது மற்றும் பிளஸ் டூ மாணவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒருபேனாவும் அனுப்பி வைக்கப்படும் என கலவை மடம் தெரிவித்துள்ளது.
வழக்குகளால் சூழப்பட்டுள்ள சங்கர மடத்தின் பெயரை மாற்றும் விதமாகவும், பக்தர்களை மீண்டும் ஆன்மீகப் பாதைக்குத் திருப்பும்விதமாகமாவும் இந்தப் பரிசுகள், பிரசாதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications