சென்னை காவல்துறையுடன் இணைந்தது செங்கை கிழக்கு
சென்னை:
சென்னை மாநகரக் காவல் துறையுடன், செங்கை கிழக்கு மாவட்ட காவல் நிலையங்கள் முறைப்படி இணைக்கப்பட்டு விட்டன.
சென்னை மாநகர காவல்துறை எல்லையை மாற்றி சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி சென்னைப் புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கிய செங்கை கிழக்கு காவல் மாவட்டம் சென்னையுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, செங்கை கிழக்கு மாவட்டம், சென்னை காவல்துறையுடன் இணைவதற்கான அறிவிப்பை சமீபத்தில்உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து செங்கை கிழக்கு மாவட்டத்தில் உள்ள 41 காவல் நிலையங்களையும் சென்னை காவல்துறையுடன் இணைத்து தற்போதுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 41 காவல் நிலையங்களும், மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்துசென்னை பெருநகர காவல்துறை ஆணையரகம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை பெருநகரில் தற்போது 155 காவல் நிலையங்களும், 14,000 காவலர்களும் உள்ளனர். கூடுதலாக 2,000 காவலர்கள் விரைவில்நியமிக்கப்படவுள்ளனர்.
பெருநகர காவல்துறை இயக்கத்திற்கு வந்துள்ள நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு கூடுதல் ஆணையர், 4 துணை போலீஸ்ஆணையர்கள், உதவி ஆணையர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications