ரயில்வே பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது: ஜெ.
சென்னை:
மத்திய ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்தில்நல்ல வளர்ச்சி காணப்பட்டாலும் கூட, அதற்கேற்ற வகையில் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
மொத்த ரயில்வே திட்ட நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்திற்கு புதிய ரயில்கள், புதிய ரயில் பாதைகள், திட்ட ஆய்வுப்பணிகள் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தாலும், சென்னை மக்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும்திருவான்மியூர்-வேளச்சேரி ரயில் பாதை அமைக்கும் பணி 2007ல்தான் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் தருகிறது.இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
வேளச்சேரி-பரங்கி மலை இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்கான செலவில், 3ல் 2மடங்கு செலவை தமிழக அரசு ஏற்பதாகஅறிவித்தும் அதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படாதது ஏமாற்றம் தருகிறது.
சென்னை-கடலூர் புதிய ரயில் மார்க்கம் தொடர்பான ஆய்வு இன்னும் சரிவர முடிவடையாத நிலையில் அதுகுறித்து அறிவிப்புவெளியாகியுள்ளது குழப்பத்தைத் தருகிறது. மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் இருந்தும், முறையான ஆய்வுக்கு வழிபிறக்காதது வருத்தம் தருகிறது.
வேலையற்றோருக்கு ரயில் கட்டண சலுகை, கேஸ், மண்ணெண்ணை ஆகியவற்றை கொண்டு செல்ல கட்டணக் குறைப்பு, தமிழகத்திற்குப்புதிய ரயில்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் இந்த ரயில் பட்ஜெட் பாதி நல்ல முட்டை, பாதி அழுகல் முட்டை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.