சரவணா ஸ்டோர்ஸில் அதிரடி சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று முதல் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். குண்டூசி முதல் மின்னணுப் பொருட்கள் வரை இங்குகிடைக்காத பொருளே இல்லை எனும் அளவுக்கு தமிழகம் முழுவதும் பிரபலமான பல்பொருள் அங்காடி சரவணா ஸ்டோர்ஸ்.

இங்கு நேற்று மாலை வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டுஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் விடிய விடிய சோதனை நடந்தது.

இன்று காலையும்தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் அதற்குச் சொந்தமான பாத்திரக் கடை, நகைக்கடை ஆகியவற்றை மூடி அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது நிறுவனத்தில் இருப்பு உள்ள பொருட்கள், விற்ற பொருட்கள் உள்ளிட்டவை குறித்துஅதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் சோதனை நடந்து வருவது தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில்ஏராளமானோர் கூடியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+