டிஆர்ஓ காரில் கள்ளச் சாராய ரெய்டு நடத்திய ஏட்டையாக்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரியின் (டி.ஆர்.ஓ) காரை வழிமறித்து, கள்ளச் சாராயம் இருக்கிறதா எனசோதனையிட்ட 3 தலைமைக் காவலர்கள் (ஏட்யாைக்கள்) இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருப்பவர் எம்.கணேசன். இவரும், மனைவி நாகலட்சுமியும் சமீபத்தில்தங்களது காரில் கோவை சென்று கொண்டிருந்தனர்.

நெல்லிக்குப்பம் அருகே அவர்களது காரை 3 போலீஸார் மறித்து நிறுத்தினர். அவர்களிடம் நான் டி.ஆர்.ஓ என்றுகணேசன் கூறியுள்ளார். ஆனால் போலீஸார் அதை ஏற்கவில்லை. பொய் சொல்கிறீர்களா? என்று கேட்டு காரைசோதனையிடத் தொடங்கினர்.

இதனால் கணேசனும், நாகலட்சுமியும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் 2 பேரையும் காரிலிருந்துஇறங்குமாறும் போலீஸார் வற்புறுத்தி இறக்கி விட்டுள்ளனர்.

இந்த சமயத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள், டி.ஆர்.ஓ.வை போலீஸார் தடுத்து நிறுத்தி சாலையில் நிற்கவைத்திருப்பதைப் பார்த்து அங்கு விரைந்து வந்தனர். போலீஸாரிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர், அப்போதுதான் போலீஸாருக்கு "உறைத்துள்ளது". இதையடுத்து தங்களது வாகனத்தில் ஏறி போலீசார்அங்கிருந்து தப்பினர்.

போலீஸாரின் சோதனையால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்துஅவர் உடனடியாக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டி.ஆர்.ஓ. காரை நிறுத்தி சோதனை என்ற பெயரில் அவரை அவமானப்படுத்தியதாகக் கூறி ஏட்டையாக்கள்மாசிலாமணி, கொளஞ்சி, சீதாராமன் ஆகிய மூவரையும் இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் எஸ்.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+