ஜார்க்கண்ட்: காங், பாஜக போட்டா போட்டி
டெல்லி:
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வென்றிருந்தாலும் தனித்து ஆட்சியமைக்கபோதிய பலம் இல்லை. இதனால் அங்கு காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோச்சா- லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா கட்சி கூட்டணிஆட்சியமைக்க முயன்று வருகிறது.
பிகாரில் ஆட்சியமைக்க காங்கிரசின் உதவியை நாடியுள்ள லாலு, ஜார்க்கண்டில் காங்-ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சியமைக்க உதவப்போவதாக அறிவித்துள்ளார்.
81 இடங்கள் கொண்ட சட்டமன்றதில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. இங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம்கூட்டணிக்கு இம்முறை 35 இடங்களே கிடைத்துள்ளது.
காங்கிரஸ்- மத்திய அமைச்சர் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணி 26 இடங்களில் வென்றுள்ளது. லாலு பிரசாதின்ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7 இடங்களில் வென்றுள்ளது.
பார்வர்ட் பிளாக், கம்யூனிஸ்ட் கட்சிகள், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் கட்சி,ஜார்க்கண்ட் மாணவர் கட்சி ஆகியவை கூட்டாக 7 இடங்களில் வென்றுள்ளது. இவர்களது ஆதரவு மற்றும் லாலுவின் ஆதரவுடன்காங்கிரஸ்-ஜே.எம்.எம். கூட்டணி இங்கு ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது.
ஆனால், இதனால் 35 இடங்களைப் பிடித்துள்ள பா.ஜ.க., 3 சுயேச்சைகள் மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருக்கும் சில சிறிய கட்சிகளின்ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.
இன்று இந்தக் கூட்டணியின் தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், முதலில் முதல்வர் பதவிக்கானநபரைத் தேர்வு செய்துவிட்டு வருமாறு ஆளுநர் சையத் ராஸி அவர்களை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்.