எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டுகிறது திமுக!
சென்னை:
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மார்ச் 2ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி இளங்கோவன் பேசியதால் கோபமடைந்த திமுக தலைமை, தனது உயர் நிலை செயல் மட்டக் குழுக்கூட்டத்தைக் கூட்டி இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எங்களது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறதிமுகவுக்கு என்ன உரிமை உள்ளது? என்று அவர்கள் குரல் எழுப்புகின்றனர்.
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கரு. சண்முகம் இதுகுறித்துக் கூறுகையில், இளங்கோவன் சொன்னதில் என்ன தவறு? அப்படியேதவறாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூற திமுகவுக்கு என்ன உரிமை உள்ளது?
வாரிசு அரசியலை மேற்கொண்டு வரும் திமுகவுக்கு ஜனநாயக ரீதியில் செயல்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரைக் குறை கூறகொஞ்சம் கூட அருகதை கிடையாது என்று காட்டமாக தெரிவித்தார்.
திமுகவின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் மேலிடம் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி மீறி எடுத்தால் மாபெரும்போராட்டம் நடத்துவோம் என்றும் கரு. சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.