குளிக்கும் போது வேடிக்கை பார்த்த சிறுவர்கள்: மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குளிக்கும்போது 3 சிறுவர்கள் தன்னைப் பார்த்து கேலி செய்ததால் மனமுடைந்த மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பல்லாவரம் நாகல்கேனி பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 13). இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் 8வதுவகுப்புப் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள குடிசையால் அமைந்த அறைக்குள் சென்றுகுளித்துள்ளார். அதற்கு மேல் கூரை கிடையாது.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கமீல் (14), பர்னபாஸ், சுரேஷ் (இருவருக்கும் வயது 11) ஆகிய மூன்று சிறுவர்களும் குளியலறையின்மேல் பகுதிவழியாக ராணி குளிப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.

தற்செயலாக நிமிர்ந்த ராணி, மூன்று பேரும் தான் குளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாகதனது வீட்டில் அதுகுறித்துக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பள்ளிக்குச் சென்றபோது 3 மாணவர்களும் ராணியைக் கேலி செய்து கிண்டலடித்துள்ளனர். இதனால் கூசிப் போன ராணிவீட்டுக்கு வந்து மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராணி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் புரசைவாக்கம் சிறுவர்சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+