நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை:
தமிழக சட்டசபையில் 2005-06ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 30ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஒரு வார காலம் நடந்தஇந்தக் கூட்டத்திற்குப் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் நாளை காலை 11 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. அப்போது நிதி நிலை அறிக்கையை பொன்னையன் தாக்கல்செய்கிறார்.
இதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டசபைத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாட்கள் வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் தொடன் போது 49 சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டின் பின்னணியில் இந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் இருகட்சிகளும் எந்தளவுக்கு ஒத்து செயல்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சட்டசபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்தத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த பட்ட்ெடில் சலுகைகளை அள்ளித்தந்தாலும் ஆச்சரியமில்லை.