For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியுடன் சோனியா தூதர் போனில் பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

திமுக தலைவர் கருணாநிதியுடன், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல் தொலைபேசியில் பேசினார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விவகாரம் தொடர்பாக கருணாநிதியை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தனதுதூதராக அகமது படேலை நிநயமித்துள்ளார்.

அவர் சென்னைக்கு நேற்றே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் கருணாநிதியுடன் படேல் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

பிகார், ஜார்க்கண்டில் ஆட்சியமைப்பது தொடர்பான பணிகளில் சோனியாவுக்குத் துணையாக அரசியல் நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளதால் தன்னால் உடனடியாக சென்னை வர முடியவில்லை என கருணாநிதியிடம் படேல் கூறியதாகத் தெரிகிறது.

மேலும் இளங்கோவனை அமைச்சரைவயில் இருந்து நீக்குவது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என கருணாநிதியிடம் அவர்தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், கருணாநிதியுடன்படேல் பேச்சு நடத்தியுள்ளார். இந்த விவகாரம் இப்போதைக்கு முடிந்து போன விஷயமாக காங்கிரஸ் கருதுகிறது. இதுதொடர்பாகஜி.கே.வாசனுடனும் படேல் பேசியுள்ளார்.

தற்போது பிகார், ஜார்க்கண்ட், கோவா மாநில பிரச்சினைகளில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருவதால், இந்தப் பிரச்சனை குறித்து பின்னர்திமுகவிடன் விரிவாக பேசப்படும்.

இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடு எதையும் திமுக நிர்ணயிக்கவில்லை. எனவே இந்தப் பிரச்சினையில் அவசரம்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதை விட முக்கியப் பிரச்சனைகள் இருப்பதால் இதை இப்போதைக்கு அப்படியே விட்டு விடவேபடேலும் விரும்புகிறார் என்றார் சர்மா.

இதற்கிடையே, இளங்கோவனை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும்உறுதியளித்துள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X