வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்கியது
சென்னை:
தமிழகத்தில் 6 மாநகராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்று தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக புகார்எழுந்தது. இதையடுத்து கேரள தலைமை தேர்தல் ஆணையர் தாமஸ் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற 5மாநகராட்சிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் முழுமையான அளவில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கவும், திருத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளில் படிப்படியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்படவுள்ளது.
சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளிலும் இன்று முதல் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரி பார்க்ப்படவுள்ளது. வரும் 23ம் தேதி வரைஇந்தப் பணி நடக்கும்.