கோவை சிறையில் மீண்டும் செல்போன் பறிமுதல் !
கோவை:
கோவை மத்திய சிறையில் நடந்த அதிரடி சோதனையில் மீண்டும் செல்போன், சார்ஜர் மற்றும் ரேடியோக்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் செல்போன் மற்றும் ரேடியோக்களைபயன்படுத்துவதாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்பேரில் சிறைத்துறை அதிகாரிகளும் திடீர் திடீரென சோதனை நடத்தி செல்போன், எப்.எம். ரேடியோக்கள்மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியும் வருகின்றனர்.
ஆனாலும் இங்குள்ள கைதிகளுக்கு மீண்டும் இவை கிடைத்து விடுகின்றன. இவர்களை பார்க்க வரும்உறவினர்களிடமிருந்து தான் இப்பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பும் கிடைப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் தான் அதிகாரிகள் சோதனை நடத்தி செல்போன்கள், சார்ஜர்கள், எப்.எம்.ரேடியோக்கள், ஸ்குரு டிரைவர்கள் மற்றும் ஆயதங்களை கைப்பற்றினார்கள்.
இந் நிலையில் நள்ளிரவில் சிறைத்துறை டி.ஐ.ஜி. எஸ்ரா தலைமையிலான அதிகாரிகள் சிறையில் திடீர் சோதனைநடத்தினார்கள்.
இதில், மேற்கூரை மற்றும் சுவற்றுக்கு இடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன், 5 எப்.எம். ரேடியோக்கள்,8 பேட்டரி செல்கள், செல்போன் சார்ஜர், 4 இயர் போன், கத்தரிக்கோல் மற்றும் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
செல்போனை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் சிம் கார்ட் இல்லை. கைதிகள் பேசி முடித்து விட்டுஉடனடியாக சிம் கார்டுகளை கழட்டி தங்களது அறையிலேயே மறைத்து வைத்து விடுகின்றனர்.
இதன் மூலம், அதிகாரிகள் செல்போனை கைப்பற்றினாலும் அடுத்த முறை செல்போன் கிடைக்கும் போது அந்த சிம்கார்டை பயன்படுத்தினால் பழைய எண்ணிலேயே அவர்களை எளிதில் தொடர்பு கொண்டு பேசலாம்.
இதைத் தடுக்க என்ன செய்வது என தெரியாமல் அதிகாரிகள் விழித்து வருகின்றனர்.