ரேஷன் கார்டுகளை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை:
தமிழகத்தில் பழைய ரேஷன் கார்டுகளைப் புதுப்பித்துக் கொள்ள மேலும் 2 நாள் அவகாசத்தை தமிழக அரசுஅளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதில் புதிய கார்டுகளை வழங்குவதற்காக,தற்போதைய கார்டுதாரர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. விண்ணப்பத்தைக் கொடுப்பதற்கானகாலக்கெடு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது.
இருப்பினும் ஏராளமான பேர் கார்டுகளைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களைக் கொடுக்காமல் இருந்தனர்.மேலும் காலக் கெடுவை நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றுவருகிற 5 மற்றும் 6ம் தேதிகளிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம்.
4ம் தேதி வரை தங்களது பகுதி ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை 5 மற்றும் 6ம் தேதிகளில்சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கொடுக்கலாம். இந்த கடைசி வாய்ப்பை பொதுமக்கள் சரியான முறையில்பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.