என்னை சோனியா ராஜினாமா செய்ய சொல்லவில்லை: இளங்கோவன்
டெல்லி:
அமைச்சர் பதவியில் இருந்து என்னை சோனியா காந்தி ராஜினாமா செய்யச் சொல்லவில்லை என்று மத்திய வர்த்தகத்துறைஇணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக கேவலமாகப் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் இளங்கோவன். அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுகவலியுறுத்தியுள்ளது.
தனது அமைச்சர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் இளங்கோவன் கூறுகையில், நான் ராஜினாமா செய்ய மாட்டேன், அப்படிச் செய்யமாறு சோனியா காந்தியும்என்னிடம் கூறவில்லை.
சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் நான் என்ன பேசினேன் என்பது குறித்து சோனியா காந்தியிடம் விளக்கிவிட்டேன்.
திமுகவின் தீர்மானம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. திமுகவின் நலனுக்காக எனது பதவியை ராஜினாமா செய்யகட்சி மேலிடம் எனக்கு உத்தரவிடுமா என்பதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தயாரில்லை.
எனக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே மோதலை உருவாக்க சில சக்திகள் முயல்கின்றன என்று நான்சந்தேகிக்கிறேன். அந்த சக்திகள் நிச்சயம் திமுகவில் இருக்காது என்றும் நம்புகிறேன்.
கருணாநிதியின் ஜாதி குறித்து நான் எதுவும் பேசவில்லை. அதேபோல எனது தந்தை ஈ.வி.கே.சம்பத்தை கருணாநிதி தாக்கமுயன்றார் என்றும் பேசவில்லை. மொத்தத்தில் அந்தக் கூட்டத்தில் நான் பேசியவற்றை, தவறான முறையில் யாரோ சிலர்(காங்கிரஸ் எம்பி அல்லது எம்எல்ஏக்கள்) திரித்து கருணாநிதியிடம் கூறியுள்ளனர்
அதனால் தான் இவ்வளவு குழப்பம் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications