For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ, சசிகலாவுக்கு பெங்களூர் கோர்ட் சம்மன்: 14ம் தேதி விசாரணை ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

வருமானத்தை மீறி முதல்வர் ஜெயலலிதா, அவரது உயிர்த் தோழி சசிகலா, அவரது அக்காள் மகள் சுதாகரன், இளவரசி ஆகியோர்ரூ. 66 கோடி சொத்து குவித்தது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 14ம் தேதி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் லண்டனில் முறைகேடாக ஹோட்டல் வாங்கிய வழக்கில் ஜெயலலிதா, மாஜி எம்பியும் சசிகலாவின் அக்காள் மகனுமானதினகரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையும் 14ம் தேதி தொடங்குகிறது.

இந்த சம்மன்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் மூலம் இந்த நால்வரிடமும் வழங்கப்படும்.

கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வர் பதவியில் ஜெயலலிதா இருந்தபோது, தங்களது வருமானத்தையும்மீறி இவர்கள் ரூ. 66 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், வழக்கு விசாரணையை இவர்கள் கேலிக்கூத்தாக்கினர். வளர்ப்பு மகனும் சிவாஜி வீட்டு மருமகனுமான சுதாகரன் நீதிமன்ற விசாரணையின்போது கேள்விகள்கேட்கப்பட்டபோது கிண்டலடிக்கும் வகையில் பதில் சொன்னார்.

ஜெயலலிதாவுக்கும் சசிகலாவும் நீதிமன்றத்தில் வந்து சொல்ல வேண்டிய பதில்களை போயஸ் தோட்டத்தில் இருந்தவாரே சொல்லிஅனுப்பினர். அவர்களுக்கு நீதிமன்றத்தின் கேள்விகள் பவ்யமாக அனுப்பி வைக்கப்பட்டன. பதில்கள் வீட்டில் இருந்தவாரேதரப்பட்டன.

விசாரணையே இவர்களுக்கு சாதகமாகத் திருப்பப்பட்டது. இதை எதிர்த்து 2003ம் ஆண்டு திமுக பொதுச் செயலாலர் அன்பழகன்உச்ச நீதிமன்றத்தில வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவை கடுமையாக கண்டித்ததோடு,வழக்கை சென்னையிலிருந்து பெங்களூருக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தனி நீதிபதியாக பச்சேபுராவும், சிறப்புவழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யாவும் நியமிக்கப்பட்டனர்.

சென்னை தனி நீதிமன்றத்தில் இருந்த வழக்கு தொடர்பான 17,000 பக்க ஆவணங்கள் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டன.அதன் பின்னர் ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணி தொடங்கியது.

நீண்ட நாளாக நடந்து வந்த மொழிபெயர்க்கும் பணி சமீபத்தில் முடிவடைந்தது. நேற்று முன் தினம் ஆச்சார்யா முதன்முதலாக தனிநீதிமன்றம் அமைந்துள்ள பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்துக்குச் சென்றார்.

வழக்குத் தொடர்பான ஆவணங்களை அவர் பார்வையிட்டார்.

இந் நிலையில் வழக்கு விசாரணை வரும் 14ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. விசாரணைக்கு வருமாறு முதல்வர்ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்மனை இவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.

முன்னதாக வீரப்பன், காவிரி விவகாரத்தால் தனக்கு கர்நாடகத்தில் பாதுகாப்பு இருக்காது என முதல்வர் கூறியிருந்தார். இதனால்வழக்கை அங்கு மாற்றியதை எதிர்த்தார்.

ஆனால், அடிக்கடி மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சசிகலாவும் ஜெயலலிதாவும் சென்று வருவதை எதிர்தரப்பு சுட்டிக்காட்டியது.

மேலும் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தால் அவருக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பும்அளிக்கப்படும் என கர்நாடக அரசும் உறுதியளித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X