ஜெயலட்சுமி வழக்கு: 4ம் தேதி விசாரணை அறிக்கை
மதுரை:
ஜெயலட்சுமி தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று இறுதி விசாரணை அறிக்கை தாக்கல்செய்யப்படவில்லை. வரும் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது செக்ஸ் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களைக்கூறினார் ஜெயலட்சுமி.
அதேபோல, ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட சில போலீஸார், ஜெயலட்சுமிக்கு 80க்கும் மேற்பட்ட போலீஸாருடன்தொடர்பு இருந்ததாகவும், அவர்களிடம், பணம், நகைகளை ஜெயலட்சுமி மோசடி செய்ததாகவும் பதிலுக்குப் புகார் தெரிவித்தனர்.
இந்தப் புகார்கள் குறித்து சிபிஐ அதிகாரி சிவாஜி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. 3 மாதங்களுக்கு முன்புஇடைக்கால அறிக்கையை சிபிஐ மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தது.
இன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்இன்று பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் எதிர்பார்த்தபடி இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை
சிபிஐ வழக்கறிஞர் டேணியல், நீதிபதியை அவரது அறையில் சந்தித்து சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அறிக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் உள்ளது என்று மட்டும் கூறிச் சென்றார்.
எனவே வெள்ளிக்கிழமை ஜெயலட்சுமி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications