For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.கனகராஜ் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின்எண்ணிக்கை 25 ஆக குறைந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 42 ஆகும். ஆனால் 26 நீதிபதிகள்தான் இருந்துவந்தனர். இதனால் வழக்கு விசாரணை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆககுறைந்து விட்டது. இதன் காரணமாக உயர்நீதிமன்றத்தில் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றக் கிளையில் 9 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். ஆனால் நீதிபதிகள்பற்றாக்குறை காரணமாக 5 பேர்தான் தற்போது அங்கு உள்ளனர். அவர்களும் கூட சுழற்சி முறையில்தான்நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து நீதிபதிகள் ஓய்வு பெற்று வருவதால் வழக்குகள் அதிக அளவில் தேங்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது. உடனடியாக புதிய நீதிபதிகள், முழுமையான அளவுக்கு நியமிக்கப்பட்டால் மட்டுமே வழக்குகள்பெருமளவில் தேங்குவதைத் தடுக்க முடியும் என்று உயர் நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நீதிபதி கனகராஜ், 1997ம் ஆண்டு உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1999ம் ஆண்டுநிரந்தர நீதிபதியாக அறிவிக்கப்பட்டார்.

சமீபத்தில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக தமிழக அரசைக் கடுமையாக எச்சரித்து அந்த வழக்கைஉடனடியாக தொடங்க உத்தரவிட்டவர் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X