புதுவை அரசை டிஸ்மிஸ் செய்ய அதிமுக கோரிக்கை
பாண்டிச்சேரி:
புதுவை காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
புதுவை பிரதேச அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில்,
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தைஎட்டியுள்ளது. சட்டையைப் பிடித்து அடித்துக் கொள்ளாத குறைதான்.
அரசு முற்றிலும் நிலை குலைந்துவிட்டது. நிர்வாகம் செயல்படாமல் முடங்கிவிட்டது. பொதுமக்கள் நலன் குறித்துகாங்கிரஸார் கவலைப்படுவதில்லை.
மார்ச் 5ம் இரு வேறு காங்கிரஸ் கோஷ்டியினர் ஊர்வலம், கூட்டம் நடத்தவுள்ளனர். இதனால் புதுவையில் சட்டம்ஒழுங்கு சீர்கெட்டு, பெரும் வன்முறை மூளும் அபாயம் உள்ளது.
இதனால் பொது மக்களுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படும். முதல்வர் ரங்கசாமி அரசு ஊழல் நிறைந்த அரசாகமாறி விட்டது. பல துறைகளிலும் ஊழல் கரைபுரண்டோடுகிறது.
இதை அதிமுகவே ஏற்கனவே பல முறை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கோஷ்டித் தலைவரானகண்ணன் கூறியதும் தான் பெரிதாகப் பேசப்படுகிறது.
இந்த அரசு பதவியில் நீடிக்க அருகதையே இல்லை. தானாக பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர்ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications