இலங்கை கடற்படை கைவரிசை: 6 தமிழக மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று விட்டனர்.
பாம்பனைச் சேர்ந்த ராமநாதன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் ராமநாதன் உள்ளிட்ட 6 பேர் புதன்கிழமை மீன் பிடிக்கச்சென்றனர். வியாழக்கிழமை அவர்கள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் 6 பேரும் திரும்பி வரவில்லை.
இந் நிலையில் இலங்கை கடற்படையினர்தான் 6 பேரையும், படகுடன் கடத்திச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்துமீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
6 மீனவர்கள் படகுடன் கடத்தப்பட்டதால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications