ஜார்க்கண்ட்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
ஜார்க்கண்ட் மற்றும் கோவா ஆளுநர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய ஐனநாயகக் கூட்டணிஎம்.பிக்கள் கூச்சல் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஒத்தி வைக்கப்பட்டன.
பாஜக தலைவர் அத்வானி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், பிரமோத் மகாஜன், திரிபாதி, முன்னாள்மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் 30 நிமிடம் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை பாஜக துணைத் தலைவர்மல்ஹோத்ரா,
ஜார்க்கண்ட் மற்றும் கோவாவில் ஆளுநர்களின் செயல்பாடுகளை எதிர்த்து நாங்கள் நடத்திய போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இரு மாநில ஆளுநர்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
புதிய ஆளுநர்களை நியமித்து முந்தைய ஆளுநர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மத்திய அரசுநிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்றத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
பின்னர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் மல்ஹோத்ரா இருவரும் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை சந்தித்து தேசியஜனநாயகக் கூட்டணியின் முடிவைத் தெரிவித்தனர்.
இரு அவைகளும் ஒத்திவைப்பு:
அதேபோல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திகோஷம் எழுப்பினர். இதனால் அவைகளில் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
கலாம்-ஜார்க்கண்ட் ஆளுநர் சந்திப்பு:
இதற்கிடையே குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ஜார்க்கண்ட் ஆளுநர் சையத் ராஸி இன்று சந்தித்துப் பேசினார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜார்க்கண்ட் நிலவரத்தை கலாமிடம் எடுத்துக் கூறினேன். ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் சிபு சோரன்,தனது பெரும்பான்மையை வரும் 21ம் தேதிக்கு முன்னதாகவே நிரூபிக்க வேண்டும்.
எந்தத் தேதியில் நிரூபிக்க வேண்டும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருடன்கலந்து ஆலோசித்த பின்பு அறிவிப்பேன் என்று கூறினார்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications