இசையமைப்பாளர் ரவீந்திரன் மரணம்
சென்னை:
பிரபல மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரன் சென்னையில் மரணமடைந்தார்.
61 வயதாகும் ரவீந்திரன், மலையாளத்தில் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். கர்நாடக சங்கீதத்தைஅடிப்படையாகக் கொண்ட இவரது பாடல்கள் மலையாளத்தில் வெகு பிரசித்தமாகும்.
450 மலையாளம் மற்றும் சில தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்துள்ள ரவீந்திரன், நுரையீரல் புற்றுநோயால்அவதிப்பட்டு வந்தார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றிமரணமடைந்தார்.
அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்குபின்னணிப் பாடகிகள் சித்ரா, சுஜாதா, எம்.ஜி.ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், இசையமைப்பாளர் யூசப்பச்சன்,ராஜாமணி, ஜேசுதாஸின் மனைவி பிரபா உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் சென்று மரியாதை செலுத்தினர்.
சித்ராவை பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தியவர் ரவீந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால்நடித்த "பரதம் என்ற படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக இவர் தேசிய விருது வாங்கியுள்ளார்.
ரவீந்திரனுக்கு மனைவி சுலோச்சனா, சாஜன், ராஜன் மற்றும் நவீன் மாதவன் ஆகிய மகன்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications