ஜெவுக்கு பாதுகாப்பு: பெங்களூரில் அதிகாரிகள் ஆலோசனை
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் வந்தால், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்புகுறித்து கர்நாடக மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குவருகிற 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் விசாரணையில் ஆஜராகுமாறு கூறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,டி.டி.வி.தினகரன், சுதாகரன் உள்ளிட்டோருக்கு தனி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளில் கர்நாடக காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.கருப்புப் பூனைப் படை பாதுகாப்புப் பிரிவில் ஜெயலலிதா இருப்பதால் அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்க கர்நாடககாவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனைநடத்தினர். எந்த வழியாக ஜெயலலிதாவை அழைத்து வருவது, போக்குவரத்து நெரிசலை எப்படிச் சமாளிப்பது என்பது உள்ளிட்டஅம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள 14ம் தேதி ஜெயலலிதா பெங்களூர் வருவாரா என்பதில் சந்தகேம் எழுந்துள்ளது. காரணம்,தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து கொண்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரையிலும் கூட்டத் தொடர் நடைபெறும்.எனவே நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா ஆஜராவாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் வழக்கறிஞர் சரவணக்குமார், பெங்களூர் தனி நீதிமன்றத்தை பார்வையிட்டுச்சென்றார்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications