ஜெவின் மரியாதையற்ற போக்கு: ராமதாஸ் சாடல்
சென்னை:
எதிர்க்கட்சியினரை மதிக்காமல் நடந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் சட்டசபை பாமக தலைவர் ஜி.கே.மணிமற்றும் பாமக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், யாரையும் மதிக்க மாட்டேன் என்கிறார் ஜெயலலிதா. சட்டசபையில்எதிர்க்கட்சியினரை அறவே அவர் மதிப்பதில்லை. அவர்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டினால் அதற்குப் பதிலளிக்க எதிர்க்கட்சியனரை சபாநாயகர் அனுமதிப்பதில்லை.
நாடாளுன்ற நடவடிக்கைகளை அப்படியே நேரடியாக ஒளிபரப்புவது போல சட்டசபை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பினால்தான்இந் நிலை மாறும்.
இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு படு மோசமான பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டினால் யாருக்குமேபலனில்லை என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications