சென்னை-மதுரை இடையே ஏப். 1 முதல் புது ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து மதுரைக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் புது எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படவுள்ளதாக மத்திய ரயில்வேஇணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை -மதுரை இடையே ஏப்ரல் 1ம் தேதி முதல் புதியஎக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. வார இறுதி நாட்களில் இந்த ரயில் இயக்கப்படும். இதற்கான உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி, பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும். அதற்கானஆய்வுப் பணிகள் முடிந்து விட்டன.
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் ஒன்றை தொடங்குவது குறித்து பரிசீலனைசெய்யப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications