பிகார்: ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

பிகாரில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு அம் மாநில ஆளுநர் பூட்டா சிங் பரிந்துரை செய்துள்ளார்.

பிகாரில் மொத்தமுள்ள 243 இடங்களில் 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்கமுடியும். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு அதிக பட்சமாக 90 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக்கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தங்களுக்கு 92 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாககூறுகிறது. ராம் விலாஸ் பாஸ்வானோ இவ்விரு கூட்டணிகளையும் ஆதரிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், ராப்ரி தேவி தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் நேற்று ஆளுநர் பூட்டாசிங்கைசந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற நிலையில் தங்களைஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று அவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று பிகாரில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பூட்டாசிங் பரிந்துரைத்துள்ளார். இந்ததகவலை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக இன்று காலை ராம்விலாஸ் பாஸ்வானை ஆளுநர் பூட்டாசிங் அழைத்து பேசினார். அப்போது அவர்,ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும், பாஜக கூட்டணிக்கும் ஆதரவளிக்க முடியாது என்பதை திட்டவட்டமாககூறிவிட்டார்.

இதனால் வேறு வழியில்லாததால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பூட்டசிங் பரிந்துரைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+