தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: நல்லகண்ணு
திருவாரூர்:
தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் ஆர். நல்லக்கண்ணு கூறினார்.
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 20-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில்கலந்து கொண்டு நல்லகண்ணு பேசியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது அதிகார மாற்றம் மட்டுமல்ல. மக்களுக்கு நன்மை செய்யும் கொள்கை உடையஅரசு அமையவேண்டும்.
வேளாண் தொழில் சிறந்து விளங்கவும், சிறு தொழில் பாதுகாக்கப்படவும் தலித் மக்களுக்கு எதிரானகொடுமைகள், சட்டம் ஒழுங்கு ஆகியவை சீர்செய்யப்படவும் வேண்டும்.
தமிழகத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டமும் கொள்கையும் கொண்ட ஆட்சி ஏற்பட இந்திய கம்யூனிஸ்டுகட்சி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இயக்கங்களை நடத்தும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையை போக்கும் கடமை ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications