முஷாரப்புக்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் அழைப்பு
அகமதாபாத்:
ஏப்ரல் 12-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஒரு நாள் போட்டியை காணவரும்படி பாகிஸ்தான்அதிபர் முஷாரப்புக்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் போட்டி 8-ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இது தவிர மேலும் 2 டெஸ்ட்போட்டிகளும், 6 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந் நிலையில் தீவிர கிரிக்கெட் ரசிகரான பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்குஇந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.
முறைப்படி இந்தியா அழைத்தால் போட்டியைக்காண வரத்தயார் என்று முஷாரப் சமீபத்தில் கூறினார். இதையடுத்து அகமதாபாத்தில்ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் ஒரு நாள் போட்டியைக் காணவரும்படி குஜராத் கிரிக்கெட் சங்கம் முஷாரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் நரஹரி அமின் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியைக்காண பாகிஸ்தான்அதிபர் முஷாரப் விரும்பியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆனால் அவருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்க வேண்டியதில்லை. அவ்வாறு அனுப்ப வேண்டுமென்றால் மத்திய அரசும்,இந்திய கிரிக்கெட் வாரியமும் தான் முடிவு செய்யவேண்டும்.
குஜராத்தில் நடைபெறும் போட்டிக்காக ஆளுநர், மாநில முதல்வர், ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட பலருக்கும் அழைப்புஅனுப்புவது வழக்கம். அவ்வாறு பாகிஸ்தான் அதிபரையும் வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.