சட்டசபை தேர்தலுடன் மக்களவை தேர்தல்: ஓ.பி.
சென்னை:
சட்டசபை தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறும் என்றும் 2 தேர்தல்களிலும் அதிமுக வெற்றி வாகை சூடும் என்றும்பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
தென் சென்னை மாவட்ட அதிமுக சார்பில் கோடம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:
தன் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தான் திமுக தலைவர் கருணாநிதி ஆட்சி நடத்தினார்.அவரது ஆட்சியில் போக்குவரத்து துறையில் ரூ. 2,000 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் 21,000 கிலோ மீட்டர் சாலைகள் தான் போடப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 32,000கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளது. மேலும் 12,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வியில் தமிழகம் இந்தியாவில் 2வது மாநிலமாக திகழ்கிறது. தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் முதலிடத்தில் உள்ளது.தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.
3 ஆண்டுகள் வறட்சியின்போதும், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டன. குடிநீர் பிரச்சினை போர்க்கால அடிப்படையில்தீர்க்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல சட்டசபை தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் வரும். இரண்டிலும்அதிமுக வெற்றி வாகை சூடும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications