இந்தியா-பாக் முதல் டெஸ்ட் நாளை துவக்கம்
மொகாலி:
இந்தியா-பாகிஸ்தான் மோதும் முதல் கிரிக்கெட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது.
இன்சமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளில்விளையாடுவதற்காக கடந்த மாதம் இந்தியா வந்துள்ளது.
இந்த அணி முதலில் பயிற்சி ஆட்டமாக வாரிய தலைவர் அணியுடன் 3 நாள் போட்டியில் மோதியது. இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
3 நாள் போட்டியில் பாகிஸ்தானின் ஆட்டம் சுமாராகவே இருந்தது. முதலில் ஆடிய அந்த அணி 275 ரன்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய வாரிய தலைவர் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 100ரன்களுக்கு மேல் எடுத்தது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது.இதையொட்டி மொகலி வந்திறங்கிய இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வாகா எல்லை வழியாக பஸ்களில் மொகாலிக்குவந்தவண்ணம் உள்ளனர். வாகா எல்லையில் அவர்களுக்கு இந்திய மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்துவருகின்றனர்.
அட்டாரி பகுதியிலிருந்து சண்டிகாருக்கு இயக்கப்படுவதாக இருந்த சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் ரசிகர்கள் பஸ்களில் வந்து குவிகின்றனர்.
டெஸ்ட் போட்டி நடைபெறுவதையொட்டி மொகாலியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 9.30 மணியளவில் தொடங்கும் இப்போட்டியை இந்தியாவில் தூர்தர்ஷன் நேரடியாகஒளிபரப்புகிறது. சாட்டிலைட் உரிமையை சோனி டி.வி. நிறுவனம் பெற்றுள்ளது.