"அம்மா"வை பாராட்டிய பாஜக எம்எல்ஏ!
சென்னை:
மத்திய பட்ஜெட்டை கடுமையாக தாக்கியும், தமிழக அரசின் பட்ஜெட்டை ஓஹோவென புகழ்ந்தும் பேசி முதல்வர்ஜெயலலிதாவின் பாராட்டுக்கு உள்ளானார் பாஜக எம்.எல்.ஏவான அரசன்.
சட்டசபையில் இவரது பேச்சை முதல்வர் ஜெயலலிதா உள்பட அதிமுகவினர் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர் அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்த அரசன், பின்னர் திருநாவுக்கரசர்பாஜகவில் இணைந்தபோது தானும் இணைந்தார். இப்போது பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மத்திய அரசை கடுமையாக சாடினார்.தமிழக அரசை வெகுவாக புகழ்ந்தார்.
அரசன் பேசிய பேச்சு:
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதேபோல தனதுபதவிக்காலம் முழுவதும் பட்ஜெட் போட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை அமெரிக்காவும், கேரளாவைஆப்பிரிக்காவும், கர்நாடகத்தை கனடாவும், ஆந்திராவை ஆஸ்திரேலியாவும் விலைக்கு வாங்கியிருக்கும்.
ஆனால் தமிழகத்தில் அதற்கு நேர் மாறாக அருமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்கள். நமது சொந்த மூலாதாரப்பொருட்களை மட்டுமே நம்பி இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதான் உண்மையான சுதேசிபட்ஜெட்.
சுதேசிக் கொள்கையை தமிழக அரசுதான் சரியாக நடைமுறைப்படுத்துகிறது என்றார் அரசன்.
அரசனின் இந்த சுதேசி பேச்சை முதல்வர் ஜெயலலிதா வெகுவாக ரசித்தார். அம்மாவின் ரசிப்பைக் கண்ட அதிமுகஉறுப்பினர்களும் உற்சாகமாகி மேசைகளைத் தட்டி அரசனை உற்சாகப்படுத்தியவாறு இருந்தனர்.
அரசின் பேச்சுக்கு அவ்வப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தாலும், அதிமுகவினன் உற்சாகக்கூக்குரலில் காங்கிரஸாரின் குரல் எடுபடவே இல்லை.
விரைவில் அரசன் அதிமுகவுக்குப் போனாலும் ஆச்சரியமில்லை.












Click it and Unblock the Notifications