ஜெ வேணாம்..சோனியாவ பாருங்க: இளங்கோவன்
சென்னை :
பெண்கள் யாரும் ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டாம். சோனியா காந்தியை முன் மாதியாக எடுத்துக் கொண்டு செயல்படுங்கள்என்று பெண்களுக்கு மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவுரை கூறியுள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி மந்தைவெளியில் உள்ள இளங்கோவனின் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர்பேசுகையில்,
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்கள் உரிமை. எனவே கேட்கவேண்டியதில்லை. அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மகளிர் தியாகம் எல்லாம் அன்னை சோனியா காந்தி மூலம் தெகிறது. தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியையே வேண்டாம்என்று உதறியவர் அவர். ஆனால் சென்னையில் சில பெண்களைப் (ஜெயலலிதா?) பார்க்கும்போது பயமாக இருக்கிறது.நாட்டுக்கு கேடு விளைவிக்கிறார்களோ என்ற கோபம் வருகிறது. ஆகவே மகளிர் எல்லோரும் சோனியா காந்தியை பின்பற்றவேண்டும். சென்னையில் உள்ளவர்களை பின்பற்றுவது நல்லதல்ல.
இஸ்லாமிய மதச் சார்புள்ள ஆப்கானிஸ்தானில் தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.இந்தியாவிலும் தடையை மீறி விமர்சனங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு, எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில்மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications