ஜெயலலிதாவின் மகளிர் தின வாழ்த்து
சென்னை:
ஆண்களின் கோட்டை என்று கூறப்படும் துறைகளில் பெண்கள் வியத்தகு சாதனை படைத்து வருகிறார்கள் என்று முதல்வர்ஜெயலலிதா மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
உலகெங்கிலும் உள்ள மகளிரும், மகளிர் அமைப்புகளும், தங்களுடைய நாடு, இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம்,அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு, சமத்துவம், நீதி, கண்ணியம், வளர்ச்சி ஆகிய தங்களது லட்சியங்களை எய்திடதங்களை மறு அர்ப்பணம் செய்து கொள்கிற ஒரு தினம்தான் மகளிர் தினம்.
மகளிருக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பது என்னுடைய நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு கொள்கையாகும்.அனைத்துப் பொதுக் கொள்கைகளுமே மகளிர் தங்களது உரிமைகளையும், அதிகாரங்கைளயும் பெறுவதற்கான வாய்ப்புகளைஉருவாக்கித் தருவனவாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை ஆகும்.
இதுவே, தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு இயக்கம், நாட்டிலேயேமுதன் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் அதிரடிப்படை, அனைத்து மகளிர் காவலர் அணிஆகியவற்றை உருவாக்கியதற்கும்,
மகளிரைடேய தன்னம்பிக்கை உணர்வையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திட மகளிருக்கான சேவைகளின் தன்மையை உயர்த்திபல்வேறு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டதற்கும் ஆதார சுருதியாக விளங்கியது.
ஆண்களின் கோட்டைகள் என இதுவரை கருதப்பட்டு வந்த பல துறைகளில் இன்றைக்கு மகளிர் வியத்தகு சாதனைகள் பலபடைத்து வருவதை அன்றாடம் நாம் கண்டு வருகிறோம். இந்தச் சாதனையின் விளைவாகப் பிறந்த புதிய நம்பிக்கையைஆக்கப்பூர்வமான வழிகளில் மேலும் வலுப்படுத்த மகளிர் விடுதலைச் சுடரை முன் எடுத்துச் சென்று மிகவும் நலிந்த, உரியவாய்ப்புகள் கிடைக்கப் பெறாத தங்களின் சகோதரிகளின் முன்னேற்றத்துக்கு தங்களுடைய அறிவு, திறன், ஆற்றல்ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
சோதனைகளும், சவால்களும் நிறைந்த இன்றையச் சூழ்நிலையில் சமத்துவம், கண்ணியம், வாய்ப்பு மற்றும் வாழ்க்கையின்முழுமையான வளங்களைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றைப் பெற்றிட நம்மை நாமே மறு அர்ப்பணம் செய்துகொள்வோமாக என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications