நெல்லை பல்கலை. துணைவேந்தரான பி.எச்.பாண்டியன் மனைவி!
சென்னை:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முன்னாள் தமிழக சட்டசபைசபாநாயகரும், அதிமுக எம்.பிக்கள் குழுவின் தலைவருமான பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன்நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைத் தலைவராக பணியாற்றி வரும் டாக்டர் சிந்தியா பாண்டியன்,நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் அவர் அப்பொறுப்பில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
சிந்தியா பாண்டியன், 26 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில்பல்வேறு பொறுப்புகளில் அவர் இருந்துள்ளார். பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் என்ற புதிய படிப்பையும் அவர்உருவாக்கி அமல்படுத்தியவர்.
இவரது கணவரான பி.எச்.பாண்டியன் தற்போது அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.இவர்களது மகன் மனோஜ் பாண்டியன், சேரன் மகாதேவி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆவார்.
சபாநாயகராக இருந்தபோது தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக கர்ஜித்த பி.எச்.பாண்டியன் கொஞ்சகாலமாக அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications