For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரஞ்ச் ஓப்பன்: சானியா நம்பிக்கை

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

உலகத்தர வரிசையில் முதல் 50 பேர் பட்டியலில் இடம்பிடிப்பேன் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா கூறினார்.

Sania Mirzaதுபாய் ஓப்பன் போட்டியின் இரண்டாவது சுற்றில் சானியா, அமெரிக்க ஓப்பனில் கோப்பையை வென்றஸ்வெட்லானாவை தோற்கடித்து சாதனை படைத்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகத்தர வரிசை பட்டியலில் 200வது இடத்திற்கு மேல் இருந்தவர், கடந்த இருமாதங்களிலேயே 77வது இடத்திற்கு முன்னேறிவிட்டார்.

மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்த சானியா நிருபர்களிடம் கூறுகையில், துபாய் ஓப்பன்போட்டியில் விளையாடும்போது எனது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறிது நாட்கள்ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்தில் நான் மீண்டும் எனது விளையாட்டை துவங்கி விடுவேன். இம்மாத இறுதியில் மியாமிசென்று விளையாட உள்ளேன். அதன் பிறகு பிரான்சில் சில போட்டிகளில் கலந்து கொண்டு விட்டு டெல்லியில்நடைபெற உள்ள பெடரேஷன் கோப்பை போட்டியிலும் கலந்து கொள்கிறேன்.

பிரெஞ்ச் ஓப்பன் போட்டி களிமண்ணாலான மைதானத்தில் நடைபெறும். எனக்கு இது போன்ற மைதானத்தில்அதிகமாக ஆடி பழக்கமில்லை. ஆனாலும் கடுமையாக பயிற்சி செய்து பிரெஞ்ச் ஓப்பனிலும் சிறப்பாகவிளையாடுவேன் என்றார்.

டென்னிஸில் சானியா சாதனை மேல் சாதனை படைத்து வருவதால் பல சர்வதேச நிறுவனங்கள் அவரை விளம்பரமாடலாக்க போட்டி போட்டு வருகின்றன. இத்தாலியைச் சேர்ந்த லோட்டோ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சானியாமிர்சாவின் கையெழுத்திட்ட பொருட்களை விற்பனை செய்ய முன் வந்துள்ளது.

இதற்கு முன்பு டென்னிஸ் உலகில் அகாசி, ஸ்டெபி கிராப், ஸ்டீபன் எட்பெர்க் ஆகிய மூன்றே பேருக்குத் தான்இந்த பெருமை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X