இன்று சிவ ராத்திரி: கோவில்களில் சிறப்பு பூஜைகள்
சென்னை:
இன்று சிவ ராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சிவனுக்கு மிகவும் பிடித்த இந்த ராத்திரியை சிவ சதுர்த்தசி என்றும் கூறுவார்கள். பிரதோஷ சமயம் முதல் நடு இரவுவரை கிருஷ்ண சதுர்த்தசி வியாபித்திருக்கும் அன்று தான் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி என்பது அடி, முடி, எல்லை ஆகியவை இல்லாமல் ஜோதி வடிவில் ஜோதிர்லிங்கமாக ஆகாயத்திற்கும்,பூமிக்கும் இடையே விளங்கும் சிவனை நாம் சிறப்பாக வழிபடுகின்ற இரவாகும்.
இத் தினத்தில் சிவபெருமானை வணங்கி வழிபடுவோருக்கு எல்லா விதமான சிறப்புகளும் கிடைக்கும் என்பதுஐதீகம். உலகம் நீடித்திருக்கும் காலம் கல்பம் என அழைக்கப்படுகிறது. கல்ப முடிவில் பரமேஸ்வரர் பிரளயத்தைஉண்டாக்கி உலகை அழிக்கிறார்.
அதனால் எங்கும் இருள்மயமாகிறது. அனைத்தும் அழிவுற்ற உலகின் அவல நிலையைக்கண்டு ஈஸ்வரிகலங்குகிறார். இதனால் மீண்டும் உலகை உண்டாக்கித் தரவேண்டுமென்று ஈஸ்வரனை பிரார்த்திக்கின்றாள்.
உடனே ஈசன் மனமிறங்கி ஜீவராசிகள் அனைத்தும் உயிர் பெற்று எழுமாறு அருள் புரிகின்றான். இதனால் ஈஸ்வரிமகிழ்ச்சி அடைகிறாள். இந்த சுபராத்திரியே சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள சிவாலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
காளஹஸ்தியில் ப.சிதம்பரம்:
சிவராத்திரியையொட்டி காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோயிலில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் தரிசனம்செய்தனர்.