அரசு வேலை: பார்வையற்ற பட்டதாரிகளிடம் ஜெ. உறுதி
சென்னை:
அரசுப் பணிகளில் எ மற்றும் பி பிரிவுகளில் பார்வையற்ற, ஊனமுற்றவர்கள் பணியாற்ற அரசாணை வெளியிடப்பட வண்டும் என்பது உள்ளிட்ட 8 கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பரிசீலிக்கப்படும் என பார்வையற்ற பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததுள்ளார்.
அரசுப் பணி நியமனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், ஏ, பி பிரிவுகளில் பார்வையற்ற, ஊனமுற்றவர்கள் பணியாற்ற தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வையற்ற பட்டதாரி வாலிபர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் அண்ணா சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களை அடித்து, வேனில் ஏற்றிச் சென்றதால் பெரும பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் பார்வையற்றோர் சங்க நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து அனைத்துக் கோரிக்கைகளும் பரிவுடன் பசீலிக்கப்படும். உங்களுக்கு விரைவில் விடியல் வரும் என்று ஜெயலலிதா உறுதியளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாக அவர்கள் ஜெயலலிதாவிடம் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications