இல.கணேசன் மணிவிழா: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசனின் மணிவிழாவையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துதெரிவித்தனர்.
இல.கணேசனின் மணிவிழாவையொட்டி சென்னை கோயம்பேடு ஐஸ்வர்ய மஹாலில் இன்று விழா நடந்தது. காலையில்ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பாஜக மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கணேசனுக்கு வாழ்த்துதெரிவித்தனர்.
பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கைய நாயுடு, திருநாவுக்கரசர், ஓ.ராஜகோபால், ஜனா. கிருஷ்ணமூர்த்தி,பங்காரு லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுகுமாறன் நம்பியார், எச்.ராஜா, ஜெகவீரபாண்டியன்,
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன்,கவிஞர்கள் வாலி, வைரமுத்து, சோ, பாலகுமாரன், ஜேப்பியார், நடிகர்கள் பார்த்திபன், பாக்கியராஜ், டெல்லி கணேஷ், பூர்ணிமாபாக்கியராஜ், டி.ராஜந்தர்,
செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, குன்னக்குடி வைத்தியநாதன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.மணி விழாவையொட்டி கணேசன் கூறுகையில், தமிழகம் பயனுற வாழ்வதற்கும், பாஜகவின் வளர்ச்சிக்கும் இறைவன்வல்லமையைத் தர வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பேன், பாஜகவை பலம் பொருந்திய கட்சியாகபாரதத்தில் அரியணை ஏற்றிட தேசிய நலனில் அக்கறையுள்ள அத்தனை பேரும் உழைப்போம் என்றார் அவர்.