வாசன் மீது மகளிர் காங். தலைவி புகார்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக தமிழக மகளிர் காங்கிரஸ்தலைவி டாக்டர் காயத்ரி தேவி புகார் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி மாநிலமகளிர் காங்கிரஸ் தலைவியாக நான் நியமிக்கப்பட்டேன். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவரை(ஜி.கே.வாசன்) அடுத்த நாளே சந்தித்து ஆதரவு கேட்டேன்.
ஆனால் என்னை அவர் கண்டுகொள்ளவில்லை, எனக்குரிய அறையையும் ஒதுக்கவில்லை. 10 நாட்கள் அலையவிட்டு, தவிக்க விட்ட பிறகே அறை ஒதுக்கப்பட்டது.
சோனியா காந்தியால் நியமிக்கப்படும் யாரையும் காங்கிரஸ் தலைவர் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.சோனியாவுக்கு விசுவாசமாக யார் இருந்தாலும் அது வாசனுக்குப் பிடிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி விமலா கணேசன் தலைமையில் சிலர் சத்தியமூர்த்திபவனில் கூட்டம் நடத்தவிருப்பதாக எனக்குத் தகவல் வந்தது. இதையடுத்து நான் வாசனை சந்தித்துப் பேசியபோதுஅவர் சரியாக பதில் கூறவில்லை.
நானே தலைவர் பதவியில் நீடிப்பேனா, இல்லையா என்பது உறுதியாக இல்லை என்று குதர்க்கமாக பதிலளித்தார்.வாசனின் தூண்டுதலின் பேரில்தான் விமலா கணேசன் தலைமையில் மகிளா காங்கிரஸைச் சேர்ந்த சிலர் கூட்டம்போட்டுள்ளனர்.
அகில இந்தியத் தலைமையிடமிருந்து வரும் பேக்ஸ் செய்திகள் எனக்கு சரியாக வருவதில்லை. விரைவில்சோனியா காந்தியை சந்தித்து வாசனின் செயல்பாடுகள் குறித்து புகார் கூறவுள்ளேன் என்றார் காயத்ரி தேவி.












Click it and Unblock the Notifications