திமுக மாநாட்டில் தொண்டர் சாவு
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த திமுக மாநாட்டுக்கு வந்த தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
திண்டுக்கல் கோட்டைப்பட்டி அருகே திமுக தென் மண்டல மாநாடு நடந்தது. இரண்டாவது நாளான நேற்று காலை பெரியகுளம்அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த தொண்டர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 15 பேர் தனி வேனில் மாநாட்டுக்குவந்திருந்தனர்.
மாநாட்டுப் பந்தலில் அமர்ந்து அவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தராஜு திடீரெனமயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜு இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவிந்தராஜுவுக்கு மனைவி,இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
முன்னதாக, மாநாட்டு மேடையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் சதீஷ் குமாருக்கும்,முத்துலட்சுமிக்கும் கருணாநிதி சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார்.












Click it and Unblock the Notifications