வாலிபர் நடத்திய சுய கடத்தல் நாடகம்
சென்னை:
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த வாலிபர், தான் கடத்தப்பட்டதாக தொலைபேசியில் பேசி தனது குடும்பத்தினரை மிரட்டினார்.இதையடுத்து அவரை போலீஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
மயிலாப்பூர் மாதவபெருமாள்கோவில் தெருவில் வசிப்பவர் சசிகுமார். துணி வியாபாரியான இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் கோபமடைந்த சசிக்குமார், வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனது வீட்டுக்கு போன் செய்து, தன்னை சிலர்கடத்தி விட்டதாகவும், ரூ. 2 லட்சம் கொடுத்தால் தன்னை விட்டு விடுவதாக அவர்கள் கூறுவதாகவும் தெவித்துள்ளார்.
இதனால் பயந்து போன சசிகுமாரின் குடும்பத்தினர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் தீவிரவிசாரணை நடத்தி தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிந்தனர்.
தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு பூத்திலிருந்து போன் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பூத்தில் விசாரித்தபோது சசிகுமார் நாடகமாடியது தெரியவந்தது. அவர் தாம்பரம் ரயில் நிலையத்தில்ஹாயாக சுற்றிக் கொண்டிருந்தார். போலீஸார் அவரைப் பிடித்து கடுமையாக எச்சரித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications